இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


பாடசாலைக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள்

TRCSL இன் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டம்

சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றும் விதத்தில் தொலைத்தொடர்பாடல் முறைமையின் பயன்பாடு தொடர்பான கல்வி ரீதியான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதை இலக்காகக்கொண்டு TRCSL பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தினை துவங்கியது.

மாணவர்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பாக ஆழமான அறிவையும் புரிதலையும் ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இது மாணவர் சமூகத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குறுகிய கால மற்றும் நீண்டகால பயனுறுதிவாய்ந்த நலன்களை ஈட்டித்தரும் என்பதில் ஐயமில்லை.

TRCSL இன் சிரேஷ்ட உத்தியோகத்தர்களே இந்நிகழ்ச்சித்திட்டங்களின் வளவாளர்களாகும்.
 

கடவத்தை, நெலும் வெஸ்ஸ ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிகழ்நிலையில் 2021.12.22 ஆம் திகதி ஒரு விழிப்பூட்டல் நிகழ்ச்சி இடம்பெற்றது.