இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


திரு. எருஷா காலிதாச

 

திரு. எருஷா காலிதாச அவர்கள் அடிப்படை நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீ்ட்டு நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் தொடர்பாக பணியாற்றுகின்ற மற்றும் சட்டத்துறை விரிவுரையாளராக பணிபுரியும் ஒரு சட்டத்தரணியாவார். செயன்முறை அறிவுச் சட்டம் பற்றிய சிறந்த புரிதலை ஊக்குவிப்பதும் செயன்முறை மற்றும் கோட்பாட்டு ரீதியான அறிவினை முகாமைத்துவ விடயங்களில் பகிர்ந்துகொள்ளவதும் காலத்தின் தேவை என்றும் உறுதியாக நம்புகிறார்.

அவர் சட்ட ஆலோசகர்கள் மற்றும் சட்டவுரைஞர்கள் பணியாற்றும் வரையறுக்கப்பட்ட TEAM Libertas நிறுவனத்தின் பணிப்பாளராக தொழிற்படுகிறார்.

மேலும், அவர் 2004 முதல் 2007 வரை இலங்கை சட்டக்கல்லூரியின் விரிவுரையாளராகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடாத்தபட்ட ‘Effective Instructing Attorneys Diploma Course” கற்கை நெறியின் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

தொழில் ரீதியாக சட்டத்தரணியாக கடமையாற்றும் திரு. எருஷா அவர்கள், இலங்கை சட்டக் கல்லூரியின் உயர்நிலை சட்டக் கற்கைகள் பிரிவின் புலமைசார் சொத்துரிமைச் சட்டம் தொடர்பான கற்கைநெறியில் டிப்ளோமா பட்டத்தை பெற்றுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டபர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதே வியாபார சட்டத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தையும் களனிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.