இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


திரு ஆர்.எம்.ஆர்.எஸ். ரணபாகு B.Sc (Hons), University of Moratuwa, Dip in Public Administration (SLIDA)

 

திரு ருக்ஷான் ரணபாகு ஒரு சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளர் ஆவார், தற்போது நியூசிலாந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் மற்றும் தொலைத்தொடர்பு டிஜிட்டல் மயமாக்கல் மென்பொருள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் உட்பட பொறியியல் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் ஒரு மாறுபட்ட தொழில்முறை பின்னணியைக் கொண்டவர், முன்னர் இலங்கை நிர்வாக சேவையில் ஒரு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அநுராதபுரம், தலவை பிரதேச செயலக அலுவலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றார், அங்கு அவர் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பொது சேவை முயற்சிகளில் ஈடுபட்டார். ருக்ஷான் மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து B.Sc (சிறப்பு) பட்டத்தையும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்திலிருந்து (SLIDA) பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பொது நிர்வாக அனுபவத்தின் இந்த தனித்துவமான கலவையுடன், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்வதற்கு அவர் நன்கு பொருத்தப்பாடுடையவர்.