இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


திரு. அசன்க பிமால் ராஜசிங்ஹ

 

திரு. அசன்க பிமால் ராஜசிங்ஹ அவர்கள் தொழிநுட்பத்துறையில் தொழில் நிபுணத்துவமிக்கவராக இருப்பதுடன், தற்போது வரையறுக்கப்பட்ட n-able தனியார் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றுகிறார். சுமார், 15 வருட அனுபவத்தினூடாக பல்வேறு துறைகளில் தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவ வகிபாகங்களை உறுதிபடுத்துகிறார்.

திரு. அசன்க அவர்கள், வரையறுக்கப்பட்ட n-able தனியார் நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கு தலைமைத்துவ வழிகாட்டல்களை வழங்கியதோடு புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் தொழிநுட்பத் துறையின் வளர்ச்சிக்காகவும் மூலோபாய வழிப்படுத்தல்களையம் தலைமைத்துவத்தையும் வழங்கி அதன் வளர்ச்சிக்காக வித்திட்டார். அங்கு பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் பதவியின் கடமைப் பொறுப்புக்களை ஏற்க முன்பு தொழிற்பாடுகளின் தலைவராக நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதில் மிகவும் முக்கியமானதொரு வகிபாகத்தினை நிறைவேற்றினார். அத்துடன், Critical Infra BU வின் முன்னால் பணிப்பாளர் நாயகமாகவும், வரையறுக்கப்பட்ட Enterprise Technology தனியார் நிறுவனத்தின் முன்னால் பிரதான கணக்கீட்டு முகாமையாளராகவும், Getz Pharma நிறுவனத்தின் முன்னால் மூன்றாம் நிலை முகாமையாளராகவும், Ceylinco IT Solutions நிறுவனத்தின் முன்னால் பயிற்றுவிப்பாளராகவும் மென்பொருள் நிகழ்ச்சித்திட்டவியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

திரு. அசன்க பிமால் ராஜசிங்ஹ அவர்கள், அயர்லாந்தின் தேசிய பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ தகவல் முறைமைகளில் விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் இலங்கையின் தேசிய வியாபார முகாமைத்துவ நிலையத்தில் தரவு தொடர்பாடல் மற்றும் மென்பொருள் விருத்தி கற்கை நெறியில் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்திசெய்துள்ளார்.